வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. -931
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. -932
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். -933
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். -934
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். -935
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். -936
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். -937
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. -938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். -939
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர். -940
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment