Tuesday, February 6, 2007

வள்ளுவர் முரண்படறாரா? - 1

87. பகை மாட்சி, அதிகாரத்தில முதல் குறள்ல,

வலியாக்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. - 861

அப்படீன்னு சொல்லி, வலிமையானவங்ககிட்ட பகைச்சுக்காதே, அதே சமயத்துல, உன்னைவிட மெலியார்கிட்ட பகைச்சுக்கலாம்னு அறிவு சொல்றவரு,

88. பகைத்திறம் தெரிதல், அதிகாரத்தில,

பகை யென்னும் பண்பிலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று. - 871

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானதுங்கறதால, விளையாட்டாக்கூட விரும்பக்கூடாது அப்படீன்னும் சொல்றாரு.

இங்கே, வள்ளுவர் முரண்படற மாதிரி தெரிஞ்சாலும், அவர் தெளிவாத்தான் இருக்கறார்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

-முநி